Thursday, December 22, 2016

இவை தொடர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்






இவை தொடர வேண்டா!


  கடந்த ஆட்சிகளில் காணப்பெறும் நிறைகளைப் பின்பற்றியும் குறைகளைக் களைந்தும் புதிய அரசு செயல்பட வேண்டும். அதற்குப் பின்வரும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி தேவை.
  1. ‘நான்’ என்னும் அகந்தை எண்ணம்.
  2. எல்லாமே முதல்வரின் செயல்பாடு என்ற மாயத்தோற்றத்தை  உருவாக்கல்.
  1. காலில் விழும் ஒழுகலாறு.
  2. ஈழத்தமிழர்களை உரிமையுடன் வாழ விடாமை.
  3. அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அஞ்சுதல்.
  4. ஊழற் செயல்பாடுகளுக்கு முதன்மை அளித்தல்.
7.அமைச்சர்களே முதலமைச்சரைப் பார்க்க  இயலாமை.
  1. முதல்வர் ஊடகங்களிலிருந்து விலகி நிற்றல்.
  2. அமைச்சர்கள் தங்கள் துறை குறித்துக் கூறவும் வாய்ப்பூட்டு போடுதல்.
10.கோப்புகளில் விரைந்து முடிவெடுக்காமை.
  1. வழக்கத்திற்கு மாறான கால அளவில் சிறைவாசிகளை அடைத்து வைத்தல்.
  1. ஒழிவாக/காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமை.
  2. ஒத்துப்போகிறவர்களுக்குப்பதவி உயர்வில் அல்லது பதவி அமர்வில் முன்னுரிமை அளித்தல்.
  1. ஆங்கில வழிக்கல்வியைத் திணித்தல்.
15.அவதூறு வழக்குகள் மூலம்  கருத்துரிமை பறித்தல்.
16.வேலைவாய்ப்புகளைப் பெருக்காமை.
  1. தொழில்வாய்ப்புகளை மிகுக்காமை.
18.போராட்டங்களை ஒடுக்குதல்.
  1. ஈழ ஆதரவாளர்களை அடக்குதல்.
  2. மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களைச் செயற்படுத்தல்.
  3. தமிழ்க்கொலைகளை ஊக்குவித்தல்.
  4. நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்காமை.
  5. தனியார் கல்வி நிலையங்களை ஊக்கப்படுத்தல்.
  6. மதுவணிகம்.
  7. கருணாநிதி எதிர்ப்பு அரசியல்.
  8. அறிஞர்களை மதிக்காமை.
  9. எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்தல்.
  10. பிற கட்சிகளிடம் நல்லிணக்கம் பேணாமை.
  11. மக்கள் சார்பாளர்களை விலைக்கு வாங்குதல்
  12. மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுத்தல்.
  13. முதன்மைப் பதவிகளில் தமிழரல்லாதவரை அமர்த்துதல்.
  14. தமிழை அன்றாடப் பயன்பாட்டு நிலையிலிருந்து அகற்றுதல்.
  15. தமிழ்வழிபாடு நடைபெறும் ஊர்க்கோயில்களில் சமற்கிருத வழிபாட்டைத் திணித்தல்.
  16. தமிழர்க்கான கோயில்களில் தமிழை அகற்றுதல்.
  17. தமிழ்மொழிக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும்  நீக்குதல்.
  18. தமிழறியாமலேயே தமிழ்நாட்டில் வாழச் செய்தல்.
  19. தேவையற்ற அடை மொழிகளில் அரசியலாளர்களையும் கலைஞர்களையும் அழைத்தல்.
  20. சாதிக்கட்சிகளை ஊக்கப்படுத்தல்.
  21. சாதிக் கொலைகளைத் தடுக்காமை.
இவையாவும் இல்லாமல் இருந்தாலே
இவை தொடர்பான குற்றங்களும் இல்லாமல் ஒழியும்; நல்லாட்சி நிலவும்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. (திருவள்ளுவர், திருக்குறள்1025)
– இலக்குவனார் திருவள்ளுவன்

No comments:

Post a Comment

Followers

Blog Archive