தலைப்பு-இலக்கியம் கூறும் காவிரி, திரு ; thalaippu_thamizharkkaana-kaviri_ilakkuvanar-thiruvalluvan

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 11- 30


  1. இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த: தாயங்கண்ணனார், அகநானூறு, 213.22
(சிறந்து விளங்கும் காவிரி நீர் வரிவரியாகச் செய்திட்ட(கருமணல்))
  1. தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்: பரணர், அகநானூறு, 222.8
(தாழ்ந்த கூந்தலையுடைய காவிரிப்பெண் கவர்ந்துகொண்டதால்)
  1. விடியல் வந்த பெரு நீர் காவிரி: பரணர், அகநானூறு, 226.10
( விடியற்காலையில் புதுவெள்ளம் பெருக வந்த காவிரி)
  1. கழை அளந்து அறியா காவிரி படப்பை: பரணர், அகநானூறு, 326/10
(கோலால் ஆழம் அளந்தறிய முடியாத காவிரியின் கரைப்பக்கம் உள்ள தோட்டம்)
  1. நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை: ஆவூர் மூலங்கிழார், அகநானூறு 4
( நாடுகள் நீர்வளத்தில்  நிறைம் வகையில் கரைகளைத் தோய்த்துக்கொண்டு செல்லும் மிகுந்த நீர்ப்பெருக்கு உடைய காவிரி)
  1. காவிரி கொண்டு ஒளித்து ஆங்குமன்னோ: பரணர், அகநானூறு, 376.11
(அத்தி என்னும் ஆடலழகனைக்) காவிரி கவர்ந்து ஒளித்துக்கொண்டது போன்று)
  1. காவிரி படப்பை உறந்தை அன்ன: குடவாயிற் கீரத்தனார், அகநானூறு, 385.4
(காவிரியின் தோட்டக்கூறு நிறைந்த உறந்தை என்னும்  ஊரைப்போன்ற)
  1. நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் பரணர், அகநானூறு, 396.14
( (ஆட்டன் அத்தியை) நீர்ப்பெருக்கு உடைய காவிரிக் கவர்ந்து ஒளித்துக் கொண்டாற்போன்று)
  1. காவிரி மலிர் நிறை அன்ன நின்: ஓரம்போகியார், ஐங்குறுநூறு, 42.3
(காவிரியின் நிறைந்த வெள்ளம் போன்ற)
  1. காவிரி
பலர் ஆடு பெரும் துறை:  பரணர், குறுந்தொகை, 258./2-3
(காவிரியாற்றில் பலர்  நீராடுகின்ற பெருந்துறை)
  1. கலுழி மலிர் நிறைக் 5
காவிரி யன்றியும்
பரணர், பதிற்றுப்பத்து, 50.5-6
(கலங்கல்  மிகுந்த வெள்ளம் நிறைந்த காவிரி போலன்றியும்)
  1. காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் –
அரிசில்கிழார், பதிற்றுப்பத்து,  73.11
(காவிரிநீர் மிகுந்துள்ள, தொலைவிலேயே விரிந்து தோன்றும் அழகினையுடைய (புகார்))
  1. காவிரி படப்பை நன் நாடு அன்ன – பெருங்குன்றூர் கிழார், பதிற்றுப்பத்து, 47
 (காவிரிபாய்ந்து வளம் மிகும்  நன்னாடு போன்ற)
  1. அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, 35.8
(அழகிய காவிரி பலகாலாக ஓடி ஊட்டம் நல்க)
  1. மிக்கு வரும் இன் நீர் காவிரி – தாமப்பல் கண்ணனார், புறநானூறு,  22
 (பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி)
  1. நீயே தண் புனல் காவிரி கிழவனை – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், புறநானூறு, 58.1
(நீ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்)
  1. சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – கோவூர் கிழார், புறநானூறு, 68/9
( மரத்தைச் சாய்க்கும் வண்ணம்,  சுரந்து நீர் பெருகிப் பெருவெள்ளம் உடைய காவிரி)
  1. பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறநானூறு, 166.28
( பூப் பரந்துள்ள புதுநீர் உடைய காவிரி உலகத்தைரப் பாதுகாக்கும்)
  1. இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி/மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – நப்பசலையார், புறநானூறு, 174.8,9
(கரையைமோதி முழங்கி  உடைக்கும் ஆழ்ந்தோடுகின்ற நீரையுடைய மிகவும் பெரிய காவிரி)
  1. காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – கல்லாடனார், புறநானூறு, 385.8
(காவிரி(யின் கிளையாகிய அரிசிலாறு) பரவிச்செல்லும்தாழ்ந்த நீரோடும்  வளமான கழிமுகப்பகுதி)
(தொடரும்)
நன்றி : http://tamilconcordance.in/concordance_list-B.html

 இலக்குவனார் திருவள்ளுவன்