Monday, September 3, 2012

தோல் (skin)


தோல்
- இலக்குவனார் திருவள்ளுவன் 


உடலுக்கு பாதுகாப்பு அளிப்பது தோலே ஆகும். தொடு உணர்வு, வலி, வெப்பம்,குளிர், அழுத்தம் முதலியவற்றை இஃது உணர வைக்கிறது. வியர்வை மூலம் கழிவு நீக்கம் செய்வதுடன் உடல் வெப்பத்தைச் சீராக்க உதவுகிறது.

உடலுக்குப் போர்வை போல் அமைவதால் போர்வை என்றும் தோல் உடலுக்குப் புறப்பகுதியாய் அமைவதால் புறணி என்றும் தோல் உரிகின்ற காரணத்தால் உரிவை என்றும் அதள், ஒளியல், வடகம், பச்சை, ஒளி முதலிய பல பெயர்களால் தோலின் தன்மைக்கேற்பவும் பெயரிட்டுள்ளனர். மனிதர்களின் தோல்களுக்கும் பிற உயிரினங்களின் தோல்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தனர். தோல் வேலை செய்பவர்களைப் பறம்பர் என அழைத்தனர். காலணி வகைகள், கைப் பைகள், கருவிகளின் உறைகள், இசைக்கருவிகளின் உறைகள், ஆயுதங்களின் உறைகள், ஆடைகள், திரைகள், கூடாராம், உருவப் பொம்மைகள் முதலியவற்றைத் தேர்ச்சியாகச் செய்யும் திறமையும் பெற்று இருந்தனர்.தோல் ஒரு புலன் உறுப்பு. இது புறத்தோல், அகத்தோல், அடித்தோல் என மூன்று அடுக்குகள் ஆனது. புறத்தோல்மெய்ம்மி (திசு) அடுக்குகளால் ஆனது. புறத்தோலில் மயிர்க் கால்களும் வியர்வைத் துளைகளும் உள்ளன. அகத்தோல் இணைப்பு மெய்ம்மிகளால் ஆனது. இதில் வியர்வைச் சுரப்பிகள், குருதி நாளங்கள்,எண்ணெய்ச் சுரப்பிகள், மயிர்க்கால் முடிச்சுகள் உள்ளன. அகத்தோலுக்கு அடியில் அமைந்ததே அடித்தோல். இதில் தொகுப்பு உயிர்மிகள் காணப்படுகின்றன. 
-  புதிய அறிவியல் 

http://thiru-science.blogspot.in/2012/09/skin.html

No comments:

Post a Comment

Followers

Blog Archive