Saturday, November 5, 2011

Vaazhviyal unmaikal aayiram 561-570 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 561-570

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 05/11/2011


561     தலைவரின் கண்ணில் நீர் வருமாறு வரும் இறப்பு பெருமை உடையது.
562        நட்பே சிறந்த காப்பு
563    வளர்பிறை போல் வளரும் பண்பாளர் நட்பு.
564    தேய்பிறை போல் தேயும் பேதையர் நட்பு.
565    படிக்கப் படிக்க இன்பம் தருவது போன்றது  பண்புடையாளர் தொடர்பு.
566    நகைத்து மகிழ்வதற்கு அல்ல நட்பு; இடித்துத் திருத்தவே நட்பு.
567    நட்பிற்குப் பழகுதல் வேண்டா; உணர்ச்சி போதும்.
568    முக நட்பு நட்பன்று; அகநட்பே நட்பு.
569    அழிவில் காத்து நல்வழி காட்டி உடன் துன்புறுவதே நட்பு.
570    உடை அவிழ்ந்தால் உடனுதவும் கை போல் துன்பம் வந்;தால்  விரைந்து நீக்குவதே நட்பு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 551-560)


No comments:

Post a Comment

Followers

Blog Archive