Saturday, October 29, 2011

vaazhviyal unmaikal aayiram 511-520: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 511-520


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/10/2011


511 சொல்லுதல் எளிது; சொல்லியதைச் செய்தல் அரிது.
512 சிறந்தோர் செயல் உயர்ந்தோராலும் போற்றப்படும்.
513 திண்ணிய எண்ணம் எண்ணியதைத் தரும்.
514 உருவத்தைப் பார்த்து இகழாதே,அச்சாணி இல்லையேல் தேரோட்டம் இல்லை.
515 கலங்காமல் தயங்காமல் கருமம் செய்க.
516 இறுதியில் இன்பம் தருவனவற்றைத் துன்பம் வந்தாலும் செய்க.
517 வினைத்திட்பம் உடையோரையே உலகம் விரும்பும்.
518 துணிவுடன் செயல்படு; துணிந்தபின் தயங்காதே.
519 செயலுக்கேற்றவாறு காலந்தாழ்ந்தோ விரைந்தோ செய்க.
520 முடியக் கூடிய வழியில் எல்லாம் செயல் ஆற்றுக.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 501- 510)

No comments:

Post a Comment

Followers

Blog Archive