Saturday, October 22, 2011

Vaazhviyal unmaikal aayiram 441-450 :வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 441-450

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 22/10/2011


441 முறை தவறும் ஆட்சியாளர் பொருளையும் மக்கள் ஆதரவையும் இழப்பர்.
442 அல்லல்படுவோரின் கண்ணீர் ஆட்சியாளரை அகற்றும் படை.
443 நல்லாட்சி இல்லையேல் புகழொளி இல்லை.
444 கொடுங்கோல் ஆட்சியில் உடைமையும் துன்பமே.
445 மீண்டும் குற்றம் செய்யா வண்ணம் நடுவுநிலையுடன் தண்டிப்பதே சிறந்தது.
446 வேகமாய் ஓங்கி மெதுவாய்த் தட்டுவது போல் தண்டி.
447 கொடுங்கோல் ஆட்சி விரைவில் அழியும்.
448 ஆளுவோரைக் கொடுமையாளராக மக்கள் எண்ணத் தொடங்கினால் உறுதியாய் ஆட்சி அகலும்.
449 மக்கள் பார்க்க இயலா ஆட்சியாளன் அழிவான.;
450 கண்ணோட்டம் உள்ளவர்களால் உலகம் உள்ளது.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 431 – 440)


No comments:

Post a Comment

Followers

Blog Archive