Monday, October 3, 2011

Vaazhviyal unmaikal aayiram 381-390 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 381-390

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 03/10/2011


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்
381 இருப்பு அளவு அறியா ஒப்புரவு செல்வத்தைத் தேய்க்கும்.
382 காலம் அறிந்து எதிர்ப்பை வெல்க.
383 காலம் அறிந்து செய்தால் முடியாததும் உண்டோ?
384 காலமறிந்து இடமறிந்து செய்தால் உலகம் உன் வயம்.
385 உலகத்தை வெல்லக் காலத்தைக் கருதுக.
386 காலம் கருதி ஒடுங்குவது வெல்வதற்கே.
387 காலம் வரும் வரை உள்ளத்தில் கிளர்ந்து வெல்க.
388 வெல்லும் காலம் வரும் வரை எதிர்ப்பிற்கு அடங்குக.
389 வாய்ப்பான காலத்தில் செயற்கரியன செய்க.
390 வாய்ப்பு வரும் வரை அடங்கு; வந்ததும் அடக்கு.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 371-380)
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive