Tuesday, October 18, 2011

Vaazhviyal unmaikal 401-410: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 401-470


வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 18/10/2011


401 பெருமைக்கும் சிறுமைக்கும் அளவுகோல் அவரவர் செயலே.
402 சுற்றம் அற்றவர் பழி பாவத்திற்கு அஞ்சார்.
403 அன்பினால் அறிவிலியை நம்புவது தீங்கே.
404 ஆராயாமல் நம்புவது அல்லலைத் தரும்.
405 ஆராயாமல் நம்பாதே; நம்பிய பின் ஐயப்படாதே.
406 வருவாய் வழிகளைப் பெருக்கிச் செல்வத்தைச் சேர்க்கவும்.
407 எண்ணம் ஒன்றாயினும் செயலால் வேறுபடுபவர் மாந்தர்.
408 வேலையைத் தகுதியானவனிடம் ஒப்படைக்கவும்; வேண்டியவன் என ஒப்படைக்காதே.
409 தக்கவனிடம் தக்க காலத்தில் தக்க வேலையை ஒப்படைக்கவும்.
410 இவன் இவ்வாறு முடிக்க வல்லவன் என்பதை உணர்ந்து அவனிடமே வேலையை ஒப்படைக்கவும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 391-400)

No comments:

Post a Comment

Followers

Blog Archive