Wednesday, September 28, 2011

Vaazhviyal unmaikal aayiram 361-370: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 361-370

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 28/09/2011



361 அழிவு, ஆக்கம், ஊதியம் கருதிச் செய்க.
362 அருந்துணையுடன் ஆராய்ந்து செய்தால் ஆகாதது ஒன்றும் இல்லை.
363 முதல் இழக்கும் ஆக்கம் அறிவுடையார் கொள்ளார்.
364 இழிவு கண்டு அஞ்சுவோர் தெளிவின்றித் தொடங்கார்.
365 வழிவகை ஆராயாது செய்தல் பகைவர்க்கு இடம் கொடுக்கும்.
366 செய்யக்கூடாததைச் செய்தால் கேடு வரும்.
367 செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டாலும் கேடு வரும்.
368 எண்ணித் துணிக; துணிந்த பின் எண்ணாதே.
369 முறையற்ற முயற்சி பலர் துணைபுரிந்தாலும் வீணாகும்.
370 அவரவர் தன்மைக்குப் பொருந்தா நன்மையும் தவறாகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 351-360)

No comments:

Post a Comment

Followers

Blog Archive