Tuesday, September 13, 2011

vaazhviyal unmaikal aayiram 251-260: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 251–260

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 

251–260: திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 13, 2011



251 வாய்மை என்னும் அறம் செய்தால் பிற அறம் எதுவும் தேவையில்லை.
252
நீரால் உடல் தூய்மை ஆவது போல் உண்மையால் உள்ளம் தூய்மை ஆகும்.
253
சான்றோர்க்கு உண்மை என்னும் விளக்கே உண்மையான விளக்கு ஆகும்.
254
உண்மை பேசுவதைவிட உயர் அறம் வேறு இல்லை.
255
எளியோரிடமும் வலியோரிடமும் சினம் தீமையே தரும்.
256
தீயன தரும் சினத்தை மற.
257
மகிழ்ச்சியைக் கொல்லும் சினமே நமக்குப் பகை.
258
உன்னைக் காக்க வேண்டும் என்றால் சினத்தில் இருந்து காத்துக் கொள்க.
259
சினம் கொண்டவனையே கொல்லும்.
260
சினத்தின் அழிவு இனத்திற்காகும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 241-250)


No comments:

Post a Comment

Followers

Blog Archive