Friday, September 9, 2011

vaazhviyal unmaikal aayiram 241-250: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம்: 241-250

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : September 9, 2011


241 பொருள்¢ ஆசையில் திருடுபவன் அருளும் அன்பும் கொண்டு வாழ முடியாது.
242
திருட்டு ஆசை உடையோர் ஒழுக்கமுடையராய் வாழமாட்டார்.
243
களவு அறிந்தோர் நெஞ்சில் வஞ்சனையே நிலைக்கும்.
244
களவு வாழ்க்கை அழிவு வாழ்க்கை.
245
தீமை விளைவிக்காத சொல்லே வாய்மையாகும்.
246
குற்றம் இல்லாத நன்மையைப் பிறருக்குத் தரும் பொய்யும் வாய்மையாகும்.
247
மனமறிய பொய் சொன்னால் மனமே துன்புறுத்தும்.
248
பொய் சொல்லா உள்ளத்தான் உலகத்தார் உள்ளத்துள் உள்ளான்.
249
தானம் தவம் இரண்டையும் விட வாய்மையே சிறந்தது.
250
பொய்யாமை ஒன்றே எல்லா அறப் பயன்களையும் தரும்.
(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 231 – 240)

No comments:

Post a Comment

Followers

Blog Archive