Thursday, September 29, 2011

Vaazhiviyal unmaikal aayiram 371-380 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 371-380

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 29/09/2011



371 உலகம் எள்ளாததை எண்ணிச் செய்க.
372 செயல் வலிமையுடன் தன்வலிமை, மாற்றான் வலிமை, இருவர்க்கும் உதவுநர்  வலிமை அறிந்து செய்க.
373 முடியக் கூடியதை அறிந்து செய்தால் முடியாதது எதுவுமில்லை.
374 வலிமையறியாத ஊக்கம் கேடு தரும்.
375 தன்னை மிகுதியாய் மதிப்பிடுபவன் விரைவில் கெடுவான்.
376 மெலியோர் சேர்க்கையும் வலிமையாகும்.
377 அளவு கடந்த ஊக்கமும் அழிவே தரும்.
378 வரும் வழி அறிந்து கொடுத்தால் வளம் பெருகும்.
379 வரவிற்கேற்ப செலவினைச் சுருக்கினால் கேடு இல்லை.
380 வருவாய் அளவை அறியாதாவனின் வளம் இல்லாமல் போகும்.

(வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 361-370)
 

No comments:

Post a Comment

Followers

Blog Archive