Wednesday, August 10, 2011

vaazhviyal unmaigal aayiram 91-100: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 91-100

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
http://www.natpu.in/?p=13242   பதிவு செய்த நாள் : August 10, 2011


91 அன்புடையவர் பிறர்க்கென எல்லாம் தருவர்.
92
அன்பு அறத்திற்கும் துணை; மறத்திற்கும் துணை.
93
அன்பு இல்லாதவரை அறமே வருத்தும்.
94
அன்பின் வழியே உயிர்கள் நிலைத்திருக்கும்.
95
சாவா மருந்தாயினும் விருந்தினருடன் உண்க.
96
விருந்தோம்ப இயலாமையே வறுமையாகும்.
97
விருந்தினரைப் போற்றுவோன் வருந்துவது இல்லை.
98
மனமுவந்து கொடுப்பதைவிட முகமலர்ச்சி மேலானது.
99
அனைவரிடமும் இன்சொல் கூறுவோர் துன்பத்தைத் துரத்துவர்.
100
இனியன பேசின் அல்லவை தேயும்; அறம் பெருகும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்  81-90

No comments:

Post a Comment

Followers

Blog Archive