Tuesday, August 23, 2011

Vaazhviyal unmaigal aayiram 151-160 : வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 151-160

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 17, 2011


151 பொறுத்தவரைப் பொன்போல் போற்றுவர்.
152
ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்தால் என்றும் புகழ்.
153
பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே.
154
செருக்கினை வெல்ல பொறுத்தலே வழி.
155
தீச்சொல் தாங்குவோர் துறவியினும் தூயர்.
156
தீச்சொல் பொறுத்தலே உண்ணா நோன்பினும் பெரிது.
157
அழுக்காறு இன்மையே ஒழுக்காறு ஆகும்.
158
அழுக்காறு இன்மைக்கு இணை ஏதும் இல்லை.
159
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்பட்டால் அறன் ஆக்கம் வராது.
160
பொறாமையால் வரும் துன்பம் அறிந்தோர் அல்லவை செய்யார்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள் 141-150

No comments:

Post a Comment

Followers

Blog Archive