Tuesday, August 23, 2011

Vaazhviyal unmaigal aayiram 141-150: வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் 141-150

வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 16, 2011


141 பிறர் மனைவியை விரும்பாதவரே அறவாணர்.
142
எத்தகைய பெரியோரும் பிறன்மனை புகுந்தால் சிறியோனே.
143
பிறர் மனைவியை நாடுவோனைப் பழி நாடும்.
144
பிறர் மனைவியை விரும்பினால் பகை பாவம் அச்சம் பழி வரும்.
145
பிறர்மனைவியை விரும்பா வாழ்வே அறவாழ்வு.
146
பிறர் மனைவியைத் தழுவாதவரே அறத்தைத் தழுவியவர்.
147
அறம் செய்தலினும் நன்று பிறர் மனைவியை விரும்பாமை.
148
தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்குக.
149
பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மறத்தல் நன்று.
150
அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறுத்தலே வலிமையுள் வலிமையாகும்.
வாழ்வியல் உண்மைகள் ஆயிரம் – திருக்குறள்

No comments:

Post a Comment

Followers

Blog Archive