Wednesday, March 30, 2011

andre; sonnaargal 42: building types 2: அன்றே சொன்னார்கள் 42 : கட்டட வகைகள் -2

அன்றே   சொன்னார்கள் 42 : 

>>அன்றே சொன்னார்கள் 42


கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2

                                                                                                                

natpu
பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன.

பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது.

மனை என்பது புலவர்களால் பல இடங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சில, (ஆய்வாளர்களுக்கு உதவும் என்பதால்) இங்குத்தரப்படுகின்றன.

அம்மூவனார் : நம் மனை (குறுந்தொகை : 327.5)
அள்ளூர் நன்முல்லையார் : நம் மனை (அகநானூறு: 46.9)
ஆலங்குடி வங்கனார் : எம்மனை (நற்றிணை: 330.7)
ஆலம்பேரி சாத்தனார் : மனைவயின் (அகநானூறு : 47.9-12)  
உலோச்சனார் : மனை (அகநானூறு : 400.2; அகநானூறு : 300.8); மனையிருந்து   
      (நற்றிணை : 372.10)
ஐயூர் முடவனார் : மனை (குறுந்தொகை :  322.5)
ஒக்கூர் மாசாத்தியார் : மனை (அகநானூறு : 384.13)
ஔவையார்:  நம் மனை (நற்றிணை : 129.5 )
ஓதலாந்தையார் : நும் மனை (குறுந்தொகை 399.1)
ஓரம்போகியார் :  தன் மனை (ஐங்குறுநூறு : 3.5); துஞ்சுமனை நெடுநகர்
     (ஐங்குறுநூறு:60.3);நின் மனை (ஐங்குறுநூறு:77.4); நும்மனை(ஐங்குறுநூறு :  
      86.4)
ஓரம்போகியார் : மனை (அகநானூறு : 316.11)
கபிலர் : மனை (கலித்தொகை : 57.24; அகநானூறு : 203.18); பிறர் மனை
     (கலித்தொகை : 59.16 ); (அகநானூறு :128.1)
கயமனார் : எம் மனை (அகநானூறு : 195.18); தன்மனை (அகநானூறு : 195.19)
கருவூர்ப் பூதஞ் சேந்தனார் : மனை : (அகநானூறு : 50.11)
காவன் முல்லைப் பூதனார் : மனை (அகநானூறு 21.7); எம்மனை  (அகநானூறு  
   195.18)
கூடலூர்ப் பல்கண்ணனார் : பாடு மனை (நற்றிணை : 380.10)
தங்காற் பொற்கொல்லனார் : செழு மனை (அகநானூறு: 355.8)
நக்கீரனார் : மனை (அகநானூறு : 389.10); எம் மனை (அகநானூறு : 346.16); நும் மனை (அகநானூறு : 346.17)
நல்லாவூர் கிழார் : மனை (அகநானூறு : 86.4)
பாலை பாடிய பெருங்கடுங்கோ : மனை  (குறுந்தொகை: 124.4);
     (கலித்தொகை :11.20); தன் மனை (குறுந்தொகை : 262.3)
பாலைக் கௌதமனார் : மனை (பதிற்றுப்பத்து : 26.3)
புலவர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) : நம் மனை (குறுந்தொகை :  321.3 )
புலவர் குன்றம் பூதனார்: மனை (பரிபாடல்: 9.21)
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் : எம் மனை (அகநானூறு : 56.12);  
      இம் மனை அன்று; அஃது எம் மனை (அகநானூறு : 56.14)
மதுரை நக்கீரர் : தன் மனை (புறநானூறு : 395.29) 
மதுரை மருதனிளநாகனார் : மனை (நற்றிணை : 392.3; கலித்தொகை : 68.22); 
   நுந்தை மனை (நற்றிணை : 362.2); எம் மனை (கலித்தொகை : 75.18; 77.18; 89.2)
மாங்குடி மருதனார் : (புறநானூறு : 396.7) மனைக்கோசர்
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: மனை மனை (அகநானூறு:54.12)
செல்லூர்ககோசிகன் கண்ணனார் : இன்சீர் அவர் மனை (அகநானூறு : 66.22)
நொச்சி நியமங்கிழார் : பிறர் மனை (புறநானூறு : 293.5)
வெள்ளை மாறனார் : எல்லா மனை (பிறர்மனை : 296.3)
பேயனார் : தன் மனை (குறுந்தொகை : 480.3)
பேயனார் : மனை (குறுந்தொகை : 405.2) 

natpu
யாரும்  குடியிராத வீடுகளை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் :
      புல்லென் வறுமனை (நற்றிணை : 321.6)
என்றும் புலவர் பாலைக் கௌதமனார்
     பீர் இவர் வேலிப் பாழ்மனை (பதிற்றுப்பத்து : 26.10) என்றும் (பீர் இவர்
பீர்க்கங்கொடி படர்ந்த) குறிப்பிடுகின்றனர்.

குடில்கள் வைக்கோலால் வேயப்பட்டன. (வீட்டின் முன்புறம் உலக்கையால் அவல் இடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர்.) இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
வரம்பில் புது வை வேய்ந்தகவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கைப் பாடுவிறந்து (பெரும்பாணாற்றுப்படை 226-227)
எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வை- வைக்கோல்; கவி குடில்- கவிழ்ந்த தோற்றத்தில் உள்ள கூரைஉடைய குடில்)

வீடுகள் வெயில் தாக்காத அளவிற்குக் குளிர்ச்சியாகவும் செழிப்பாகவும் அமைக்கப்பட்டிருந்தன என்பதைப் புலவர் ஒருவர்,
செழுந்தண் மனை (நற்றிணை : 271.3) என்று குறிப்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

இப்பொழுது வீடுகளைச் செயற்கை முறையில்தான் குளிர்ஊட்டி வைத்திருக்கின்றோம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கட்டடஅறிவியல் முறையிலேயே வெப்பம் தாக்காத படிச் சிறப்பாகக் கட்டடங்களை அமைத்துள்ளனர் என்பது அறிவியல் விந்தையன்றோ!

வீடுகள் அமைந்த முறை பற்றிய மேலும் சில தகவல்களைத் தொடர்ச்சியாக அடுத்துக் காண்போம்.
- இலக்குவனார் திருவள்ளுவன்



No comments:

Post a Comment

Followers

Blog Archive